Friday 10 January 2014









விழித்துக்கொண்டே பார்க்கின்ற
விபரீதக் கனவுகள்..?








திரைப்படஙகள் வெறும் கனவுகள்தாம்
அதுவும்
விழித்துக்கொண்டே பார்க்கின்ற
விபரீதக் கனவுகள்..?

சில வேளைகளில்
இந்த
கனவுகளைக் கண்டுமுடிக்குமுன்
கண்களே
காணாமல் போய் விடுகின்றன..?

சினிமா
என்ற மாயக்காற்றை
சுவாசித்தவர்களில்
பலர்
முதல் மூச்சிலேயே
மூர்ச்சையாகிப் போனார்கள்...!

இன்னும் சிலரோ
மூச்சிழுத்த அவசரத்தில்
தங்கள்
மூக்குகளையே உடைத்துக் கொண்டார்கள்....!

ஆனாலும்
நான் சினிமாவை நேசிக்கிறேன்..?

ஏனென்றால்
அதில் மட்டும்தானே
வில்லன்கள் வீழ்த்தப்படுகிறார்கள்..!

டி.அருள்செழியன்
ஆனந்தவிகடன்/1987


No comments:

Post a Comment